Wednesday, September 8, 2010

இறை கண்டு அஞ்சவில்லை

அரசியலார் எல்லாரும் ஆசை கூட்டி
ஆங்காங்கே நிற்கின்றார் நோன்பிற்காக
வரிசையாக ஊர் தோறும் அவர்கள் செய்யும்
வம்புகளைப் பார்க்கையில் துடித்துப் போனோம்
பரிசாக வழி காட்ட இறைவன் தந்த
பார் ஏற்ற குரான் வழியை மறந்தே போனார்
விரிசல் கண்டு மனமெல்லாம் துடிக்கின்றது
வீணானார் இறை கண்டு அஞ்சவில்லை

0 மறுமொழிகள்: