Friday, September 17, 2010

இசைஞானி

விருதளித்தார் விருதுக்கே பெருமை சேர்த்தார்
வெற்றி இசைஞானிக்கு விருதளித்து
சுருதியுடன் ராகமதைச் சேர்த்துத் தந்து
சுத்தமாக்கி மனதையெல்லாம் வெள்ளையாக்கும்
எருதேறும் அண்ணாமலை ஈசனது
எளிய தொண்டர் இளையராஜா அருகில் என்றும்
அரிதான கலை மகளே குழந்தையாகி
அமர்ந்துள்ளாள் அவர் இசையில் மயங்கி இன்றும்

0 மறுமொழிகள்: