Tuesday, September 7, 2010

இளையராஜா

இசை என்றால் இனிமை என்ற நிலையை மாற்றி
இரைச்சலென்று ஆக்கி விட்டார் கொடியோர் சில்லோர்
நிணம் தசை நார் அனைத்திற்கும் உள் நுழைந்து
நிம்மதியைத் தருவதுவே நல்ல இசை
குணம் தரவும் மனத்திற்குள் நல்லனவே
கொண்டு வந்து சேர்ப்பதுவும் இசையே ஆகும்
மணமான அவ்விசையை இளையராஜா
மன்னன் தான் தருகின்றான் வாழ்க அவன்

0 மறுமொழிகள்: