Sunday, December 5, 2010

ஆட்சியே தருவாரோ தான்

எரிந்தார்கள் எத்தனை பேர் இவருக்காக
இவர் வீட்டுப் பிள்ளைகளும் சுகமாய் வாழ
எரிந்தார்கள் மூவர் இவர் சண்டையிலே
இணைந்தார்கள் இவர்கள் மீண்டும் கோடி கொள்ள
எறிந்தார்கள் பிச்சை போல இலவசங்கள்
ஏழையரை மயக்குதற்கோ மதுக் கடைகள்
எறிவாரா மக்கள் இவர் கொள்ளை கண்டு
இலவசமாய் ஆட்சியையே தருவாரோ தான்

0 மறுமொழிகள்: