Friday, December 17, 2010

ஆரிவரை முடித்திடுவார்

எல்லாத் தவறுகளும் செய்து விட்டு
எப்படித்தான் முகம் மலரச் சிரிக்கின்றாரோ
பொல்லாதார் இவர் தம்மைப் பார்க்கும் நேரம்
புழுங்கி மனம் நோகின்றது சாகின்றது
எல்லோரும் வருந்துகின்றார் பேசுகின்றார்
இறைவனிடம் முறையிட்டு நிற்கின்றாரே
அல்லாவோ சிவனோ ஏசு தானோ
ஆரிவரை முடித்திடுவார் புரியவில்லை

0 மறுமொழிகள்: