Saturday, December 25, 2010

கிறிஸ்துமஸ் வாழ்த்து

உன்னைப் போல் பிறரையே நேசி என்ற
ஒரு வரியை உலகத்தார் கொண்டு விட்டால்
பின் னங்கு இன்ப மன்றி வேறு ஏது
பிரி வேது சரி வேது சர்ச்சை யேது
தன்னையே தந்து நின்றார் இயேசு பிரான்
தந்ததெல்லாம் அன்பு வழி ஒன்று தானே
அன்னவரும் அவதரித்தார் உலகம் உய்ய
அன்பர்களே உமக் கெந்தன் அன்பு வாழ்த்து

0 மறுமொழிகள்: