Friday, October 5, 2012

செய்திகள்

கூடங்குளம் அணுமின் நிலையம் தேவையில்லை என்று உதயகுமார் தலைமையில் மீனவ நண்பர்கள் 400 நாடகளுக்கும் மேலாகப் போராடுகின்
றனர். பல தலைவர்கள் அவர்களை ஆதரித்தும் போராட்டங்களிலே ஈடு
பட்டனர்.

வேண்டும் என்கின்ற காங்கிரஸ் நண்பர்கள் போராடத் துவங்கி விட்டார்கள். கூடங்குளத்திலா.சென்னையில் நாகர்கோவிலில் என்று பல இடங்களில். சமீபத்தில் நடந்த இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் பல இலட்சம் பேர் வாக்களித்தனர். ஆனால் போராட்ட களத்திலோ சில நூறு பேர். எத்தனை காலம் தான் இவர்கள் இப்படி ஏமாற்றித் திரிவார்கள். நாடாளுமன்றத்
தேர்தலின் போது இப்படியெல்லாம் போராட்டங்கள் நடத்தியதாக விபரம்  காட்டினால்தானே இடம் பெறலாம்.

இலட்சக் கணக்கில் வாக்களித்த இளைஞர் காங்கிர்சாரைத் திரட்டி கூடங்குளத்திற்கே போக வேண்டாமா.

உடனே போய் காங்கிரஸ் எத்தனை மக்கள் சக்தியோடு இருக்கின்றது என்பதனை எல்லொருக்கும் காட்டுங்கள்.

                                  பெரியாரின் கருப்புச் சட்டை

கருணாநிதி அவர்கள் மீண்டும் கருப்புச் சட்டைக்கு வந்து விட்டார். பெரியார் எந்தப் போராட்டம் நடத்தினாலும் தடையை மீறி சிறைச்சாலைக்குப் போவார். ஆனால் இவர்கள் கருப்புச் சட்டை போட்டுக் கொண்டு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பார்களாம். பெரியார் ஆண் பிள்ளை



நெல்லையில் பள்ளி வாகனத்தின் கதவு திறந்து ஒரு மாணவி விழுந்து காயப் பட்டிருக்கின்றார். இன்னொரு பள்ளி வாகனம் தீப் பிடித்து எரிந்திருக்கின்றது. படித்த அதிகாரிகளின் பிச்சைக் காரத்தனம் இவற்றிற்குக் காரணம். அவர்கள் வீடுகளிலும் குழந்தைகள் இருக்கின்றன. யார் நினைக்கின்றனர்.

தனியார் பள்ளிகள் பணத்தை அள்ளிக் குவிக்கின்றன. ஆசிரியர்களுக்கு சரியான ஊதியம் தருவதில்லை. யார் கேட்கின்றனர். பள்ளிக் கிளைகளோபெருகிக் கொண்டேயிருக்கின்றன. பல பெரிய கல்வி நிறுவனங்கள் ஆக்கிரமித்திருக்கின்ற அரசு நிலங்கள் பல கோடி பெறும். அரசு திமுகவினர் ஆக்கிரமித்திருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கும்.

முதலமைச்சருக்கு எதுவும் தெரியாமல் பன்னீர் செல்வம் அவர்கள் பார்த்துக் கொள்வார்.

                                         புரியவில்லை

செங்கோட்டையன் இப்போது ஜெயக்குமார்.அமைச்சர்கள் மாற்றம் புரியவில்லை.

1 மறுமொழிகள்:

said...

கருணாநிதி அவர்கள் மீண்டும் கருப்புச் சட்டைக்கு வந்து விட்டார்.

-இந்த கருப்பு கலராவது மீண்டும் ஆட்சி கட்டிலை பெற்று தருமா என்ற ஏக்கம் தான் ?

அப்பா தயவு செய்து என்னை மன்னிக்கவும். இவருக்கும் பெரியாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.