Saturday, August 10, 2013

வெட்கமில்லை வெட்கமில்லை இங்கு யாருக்கும் வெட்கமில்லை

நாடாளுமன்றம் வழக்கம் போல் செயல்பட எதிர்க்கட்சிகள் அனுமதிக்க வில்லை .யார் ஆண்டாலும் இதுதான் நிலை. பா.ஜ.க். காங்கிரஸ் எதுவெனிலும் இதுதான் நிலை.

ஆனால் உச்சநீதி மன்ற்ம் ஊழல் அரசியல்வாதிகள் மீது  கிரிமினல் வழக்குகள் இருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்றவுடன். பா.ஜ.க. காங்கிரஸ் என்று எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றாகச் சேர்ந்து விட்டன. கேவலம் கம்யூனிஸ்ட்களும்.உச்ச நீதிமன்றத்தின் கையை ஒடிக்க வேண்டும். என்று முடிவெடுத்து விட்டனர் நாட்டின் மிக முக்கிய தலைவர்கள்.

சுதந்திரம் எனது பிறப்புரிமை என்றார் லோகமான்ய பால கங்காதர திலகர் பெருமான்.

பசியில் ஏழை திருடினால் சிறை. வாழ்வதற்காக பணிக்குச் செல்லும் ஏழைப் பெண்கள் கட்டாயப் படுத்தப் பட்டு பாலியல் தொழிலில் தள்ளப் பட்டால்
அவளுக்குச் சிறை

ஊழல் எங்கள் பிறப்புரிமை அதில் உச்ச நீதி மன்றம் தலையிடுவதற்கு உரிமை கிடையாது என்பதற்கான் புதிய சட்டத்தை உடனே கொண்டு வருவோம் என்கின்றனர் வெட்கமற்ற தலைவர்கள்.இவர்கள் மனமறிந்து விபச்சாரம் செய்கின்றவர்கள்.ஆனால் இவர்களுக்கு முழு நேர காவற்றுறைக் காவல்.

இவர்களில் பிரதமர் வேட்பாளர்கள் வேறு அறிவிக்கப் படுகின்றார்கள்.

வெட்கமில்லை இங்கு வெட்கமில்லை யாருக்கும் வெட்கமில்லை  என்ற பாவேந்தரின் பாடல் வரிகள் தான் நினைவைக் குடைகின்றன.

1 மறுமொழிகள்:

said...

உண்மையான உண்மை ஐயா!!!