Thursday, July 23, 2009

நாலடியார் ஈகை

முரசு சத்தம் பத்து மைல் கேட்கும் நல்ல
முழங்கும் இடி நான்கு பத்து மைலில் கேட்கும்
தருவதொன்றே வாழ்க்கையெனக் கொண்ட சான்றோர்
தனக்கின்றிப் பிறர்க்குதவும் பெரியோர் வாழ்க்கை
சிறந்திருக்கும் மூன்றுலகும் சென்று சேரும்
செய்திடுவீர் உதவிகளை மாந்தர்களே
நிரந்தரமாய் அது ஒன்றே உங்களது
நிலைத்த புகழ் மூவுலகும் ஒங்கச் செய்யும்


நாலடியார்

ஈகை

கடிப்பிடும் கண்முரசு காதத்தோர் கேட்பர்
இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்
அடுக்கிய மூவுலகும் கேட்குமே சான்றோர்
கொடுத்தாரெனப் படுஞ் சொல்

0 மறுமொழிகள்: