Saturday, July 4, 2009

வா மீத முலை நூலில் இருந்து காதல்

உன்னைத்
தென்றல் என்றது
புகழ்ச்சியல்ல

நீயாகத்தான்
தழுவினாய்


உன்னை
மலர்கள்
என்றதும் கூட
புகழ்ச்சியல்ல

நீயாகத்தான்
மலர்ந்தாய்


உன்னைக்
கவிதை
என்றது கூட
புகழ்ச்சியல்ல

நீயாகத்தான்
தோன்றினாய்


உன்னைத் தேடவிட்ட
காரணத்தால்
தேன்
என்கின்றேன்


உன்னைத்
தீண்ட
முடியாக்
காரணத்தால்

தீ
என்கின்றேன்

0 மறுமொழிகள்: