Saturday, March 10, 2012

கொடுமையன்றோ

தந்தையரைக் கொல்லுகின்ற பிள்ளைகளும்
தாயவரின் உயிர் பறிக்கும் மைந்தர்களும்
மைந்தரையே கொல்லுகின்ற தாய்க்குலமும்
மனைவியையே கொல்லுகின்ற மடையர்களும்
கொண்டவனைக் கொல்லுகின்ற கோமளமும்
குருவினையே கொல்லுகின்ற மாணவரும்
அன்பினையே உணராமல் வளர்ந்ததனால்
அறிவின்றிப் போன ஒரு கொடுமையன்றோ

1 மறுமொழிகள்:

said...

இப்படிப்பட்ட கொடுமைகள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதெண்ணி வருந்துகின்றேன்.



கல்நன்றாய்க் கற்றுக் கருத்தாய் மடமைதனைக்
கல்நன்றாய் என்றால் கருதாமல் -கல்லென்ற
ஆசிரியர் மூச்சறுக்க அந்தோ கொலைவாளை
வீசுவதோ நற்செய்கை வீண்!