Tuesday, December 30, 2008

வெல்ல வேண்டும்

வெள்ளி செவ்வாய் கோயிலுக்குச் செல்லுகின்றீர்
வினை திர்க்க வேண்டுமென்று வேண்டுகின்றீர்
பள்ளி தோறும் தொழுகின்றீர் உருவமற்ற
படைத்தவனின் அருளுக்காய் இறைஞ்சுகின்றீர்
கன்னி மகன் தேவ மைந்தன் அருளதற்காய்
கால் மடித்து மண்டியிட்டுத் தொழுது நின்றீர்
பன்னி பன்னித் தொழுகின்றீர் கடவுளையே
படைத்தவன்தான் அன்பு என்றல் மறந்து நின்றீர்


படைத்தவனைத் தொழுது நிற்கும் உங்களுக்குள்
படைக்கலங்கள் வருவதிலே நியாயமுண்டா?
அடுத்தவனுக்கு உதவுவதே மனிதம் என்று
ஆண்டவர்கள் அனைவருமே சொல்லுகின்றார்
கெடுத்தொழியும் ஒரு சிலரை இணைந்து நின்று
கீழ்மை நிலை தனை உணர்த்தி திருத்த வேண்டும்
படித்தவரே பக்தியென்றால் அன்பு என்ற
பரம் பொருளின் நிலை உணர்த்தி வெல்ல வேண்டும்

0 மறுமொழிகள்: