Friday, July 2, 2010

அடிமைகளாய்ப் பாடினாரே

பாரதியை நினைத்தாரா இல்லை இல்லை
பாவேந்தர் தனையே தான் போற்றினாரா
ஊரறிய காந்தி மகான் புகழைப் போற்றி
உயர்ந்து நின்ற நாமக்கல் போற்றினாரா
சீர் நிறைந்த கவிமணியைப் போற்றினாரா
செந்தமிழான் தமிழ் ஒளியைப் போற்றினாரா
பார் புகழும் இவரையெல்லாம் விட்டு விட்டு
பணிந்து வாழ்ந்து அடிமைகளாய்ப் பாடினாரே

0 மறுமொழிகள்: