Sunday, July 4, 2010

ஒரு கூட்டம் உண்டு

தேவநேயப் பாவாணர் என்னும் அந்தத்
தீந்தமிழார் தனைப் பற்றிப் பேச்சே இல்லை
ஆவலுற்றுச் சுவடிகளைத் தேடித் தேடி
அனைத்தையுமே கண்டு தந்த அய்யர் இல்லை
தேவாரத் திருமறைகள் திருவாய் மொழி
தேன் தமிழின் வள்ளலார் அருட்பா இல்லை
நாவாரப் புகழுவதற்கு மட்டும் அங்கே
நடிப்பிசைப்புப் புலவர் ஒரு கூட்டம் உண்டு

0 மறுமொழிகள்: