Monday, July 19, 2010

மன நோயால் வீழ்ந்தார்

பிறர் தாயைப் பண்பாட்டுக் குறைவாய்ப் பேசும்
பேதையர்கள் தம் தாயைப் பேசுகின்றார்
குறைப் பட்ட மனத்தாராய் மற்றவரைக்
கொடு மொழியால் திட்டுகின்றார் அந்தோபாவம்
நிறைவான மனம் கொண்டார் மற்றவரின்
நிலை உணர்வார் தம் பிழையின் தரம் உணர்வார்
அறைவார் போல் வார்த்தைகளை வீசிடுவார்
அய்யகோ மன நோயால் அன்றோ வீழ்ந்தார்

0 மறுமொழிகள்: