Thursday, April 9, 2009

நல்ல வாழ்க்கை

பணம் மட்டும் வாழ்க்கைஎன்று எண்ணி நிற்பார்
பலபேர்க்கு அஞ்சி அஞ்சி வாழுகின்றார்
குணம் ஒன்றே மனிதரென வாழ வைக்கும்
கொள்கை கொண்டோர் அனைவருக்கும் அன்பு செய்வார்
நினைத்ததினை வாழ்வதற்குப் பழகி விட்டால்
நிம்மதியே மிகச் சிறந்த சொத்தாய் ஆகும்
அனைத்துலகும் நமை உறவாய் ஏற்றுக் கொள்ளும்
அதுதானே தமிழ் அளித்த நல்ல வாழ்க்கை

0 மறுமொழிகள்: