Saturday, April 18, 2009

கம்ப இராமாயணம் பழம் பாடல் புதுக் கவிதை

சூர்ப்பனகை இராவணனிடம்
காமன் என்றால் ஒருவன் தான் அவனும் தான் இங்கே
கை கட்டி நிற்கின்றான் உன்னிடத்தில் என்றால்
யான் கண்டேன் இரு காமன் ஒரிடத்தில் வாழ
யார் அவர்க்கு இணையாவர் எவரும் இலை அண்ணா
தாமவர் தம் கை வில்லின் ஆற்றலினை விஞ்ச
தரணி இதில் வீரரென ஒருவருமே இல்லை
ஆம் அவர்கள் இருவருமே சிவன் திருமால் பிரம்மா
அனைவரையும் ஒத்தவராய் நிற்கின்றார் கண்டேன்

கம்பன்

மாரர் உளரே இருவர் ஒருலகில் வாழ்வார்
வீரர் உளரோ அவரின் வில் அதனின் வல்லார்
ஆர் ஒருவர் அன்னவரை ஒப்பவர்கள் அய்யா
ஒர் ஒருவரே இறைவர் மூவரையும் ஒப்பார்

0 மறுமொழிகள்: