Wednesday, April 1, 2009

உயர்வீர்

புலன்களையே வென்று நிற்கும் துறவியரை
பொறுப்பான நல் மனிதர் தமக்குப் பின்னே
உளர் என்று வள்ளுவரும் சொல்லுகின்றார்
உலகுக்கு வழிகாட்டும் பொதுமறையில்
வளர்கின்ற பசிதன்னைப் பொறுத்து வெல்லும்
வடிவான துறவியரை விடவும் மற்றோர்
தளர்வானின் பசி தன்னைத் தீர்த்து வைக்கும்
தனி மனிதர் மிக உயர்ந்தார் என்றே சொன்னார்


உண்ணாமல் அதே நோன்பாய்க் கொண்டுயரும்
உயர் துறவிக் கூட்டத்தைக் கண்டு சொன்னார்
எண்ணுதற்கு உயர்ந்தாற்போல் தோன்றும் இவர்
எதிரிகளின் பண்பற்ற சொற்கள் தன்னை
இன்னாதாய்க் கொள்ளாமல் முக மலர்ந்து
ஏற்று அதன் பின்னாலும் நன்மை செய்யும்
நல்லாராம் அவர் பின்னால் ஆமாம் ஆமாம்
நாட்டாரே உதவி செய்யும் உயர்வீர் என்றார்


ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும்
இன்னாச் சொல் நோற்பாரின் பின்

0 மறுமொழிகள்: