Thursday, April 9, 2009

ஏங்குகின்றோம்

சாதியினை ஒழிப்பதுவாய்க் கொள்கை சொன்னார்
சாதி தோறும் வேட்பாளர் போடுகின்றார்
ஆதித் தமிழ்க் குடும்பம் தன் குடும்பம் என்று
ஆடியவர் தன் குடும்பம் பேணுகின்றார்
வாதிப்பார் யாருமில்லை அனைவருமே
வளம் சேர்த்து வாழ்வார் முன் மண்டியிட்டார்
சோதிப் பெருங்கடலே எம்மிறையே உம்
சூட்சுமத்தை அறியாமல் ஏங்குகின்றோம்

0 மறுமொழிகள்: