Wednesday, April 29, 2009

பாவம்

அன்பு கொண்டால் பண்பு காட்டி அரவணைத்தால்
அறியாமல் நம்மை ஏய்க்க ஆசை கொள்வார்
தெம்பு கொண்டு அத் தீமை அதை அறிந்தும்
தெரியாமல் செய்கின்றார் என அணைத்தால்
வம்பு செய்யப் பார்க்கின்றார் மீண்டும் மீண்டும்
வாழ்வென்றால் பணம் என்றே நம்புகின்றார்
துன்பம் அதை நம்பிப் பின்னர் துவளுகையில்
துணை தேடி அலைகின்றார் அந்தோ பாவம்

1 மறுமொழிகள்:

said...

பதிவு நன்றாகவுள்ளது.
சித்தர்களின் பாடல்களை நினைவுபடுத்துவதாகவுள்ளது....!