Saturday, August 21, 2010

நாடாளுமன்றமும் சம்பளமும்

மக்கள் சேவை செய்ய வந்த மாமனிதர்
மனம் போல சம்பளத்தை வேண்டுகின்றார்
தக்கவர்கள் ஒழிந்து விட்ட நாட்டில் இந்த
தரித்திரர்கள் தனைக் காக்க வேண்டும் என்றே
மக்களவை இவர்களுக்குச் சம்பளத்தை ஆகா
மனம் போன படி உயர்த்தித் தந்தும் இவர்
அக்கணமே காணா தென்று ஆடுகின்றார்
ஆடு மாடாய் மக்களினைக் காணுகின்றார்

0 மறுமொழிகள்: