Sunday, August 1, 2010

சம்பளமும் உயர்ந்ததம்மா

துன்பங்கள் அனுபவிப்பார் அவரைப் போலே
துடித்தழுது நிற்பவர்கள் யார் தான் உண்டு
இன்பம் என்ற வார்த்தை அவர் வாழ்க்கையிலே
என்றைக்குக் கண்டார்கள் அய்யோ பாவம்
புண்பட்ட அவர் வாழ்வில் இன்பம் சேர
பொறுப்பாக அரசு ஒருமுடிவெடுக்க
பண்பட்ட உறுப்பினர்கள் நாடாளுமன்றப்
பாவம் அவர் சம்பளமும் உயர்ந்ததம்மா

1 மறுமொழிகள்:

said...

கண்ணன் ஐயா,

அற்புதம். தினசரி செய்திகளை வெண்பாவிலே வெளிச்சம் போட்டுக் காட்டும் உங்கள் வழி அருமை.

தினம் ஒன்று நீங்கள் கட்டாயமாக எழுத வேண்டும்.

கோ.சேஷாத்ரி