Saturday, August 28, 2010

என் தம்பி நாஞ்சில் நாடன்

அண்ணாச்சி என அழைக்கும் போதினிலே
அன்பு முகம் என் முன்னர் வந்து நிற்கும்
புண்ணாக்கிப் பார்ப்போர்கள் மத்தியிலே என்னைப்
புதிதாக்கிப் பார்க்கின்ற இனிய தம்பி
கண்ணோட்டம் என்னைப் போல் கொண்ட செல்வம்
கண்ணியத்தின் மொத்த உரு நாஞ்சில் நாடன்
முன்னோர்கள் செய்த தவம் தம்பி கொண்டேன்
முத்தமிழாள் அருளாலே தெம்பு கொண்டேன்

0 மறுமொழிகள்: