Tuesday, August 24, 2010

துறவியன்று

கோவணம் தான் ஆடை கழுத்தில் ஒரு
குளிர் உருத்திராக்கம் அது மாலையாகும்
ஆவல் ஏதும் இல்லாதார் எங்கும் என்றும்
ஆண்டவனைத் தமிழ் பாடி துதித்து நிற்போர்
சாவடிகள் தனிலே தான் தங்கிக் கொள்வார்
சாப்பாடு எளிமையான உணவே ஆகும்
கோயில்களைச் சுத்தம் செய்வார் மக்களது
குறை களைய வழி சொல்வார் துறவி யன்று

0 மறுமொழிகள்: