Saturday, January 1, 2011

தமிழார் தம்மை

வெள்ளையராய் ஆக்கி விட்டார் நண்பர் சில்லோர்
விரைந் தெனக்குப் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி
நல்லவர் தாம் என்ன செய்ய வெள்ளையர்கள்
நாட்டை விட்டு மட்டும் தான் போனார் கண்டோம்
பிள்ளைகளைத் தமிழ் மறக்க வைக்கும் பெற்றோர்
பேச் சென்றால் ஆங்கிலத்தில் என்று வாழ்வோர்
சொல்லி இங்கு மாளாது தமிழர் தம்மின்
சொரணையற்ற உணர்வற்ற வாழ்க்கை தன்னை

0 மறுமொழிகள்: