Tuesday, January 25, 2011

பீம்சென் ஜோஷி

இசை வடிவாய் வாழ்ந்திருந்த பீம்சென் ஜோஷி
இந்தியத்தாய் பெற்றெடுத்த இனிய சாட்சி
அசைவின்றி அனைவரையும் கட்டிப் போடும்
அற்புதமே அவர் இசையின் வெற்றி வெற்றி
திசையெல்லாம் இசை தெரியா மக்கள் கூட
தேஷ் கேட்டார் தேசத்தின் பாடல் தன்னில்
அசைகின்ற உடல் விட்டார் விட்டால் என்ன
அவர் இசை தான் உயிரெங்கும் உயிரானதே

0 மறுமொழிகள்: