Monday, January 17, 2011

பிறந்தேன் நான்

தைப் பூசத் திருநாளில் அன்னை என்னை
தமிழ்த் தாயின் கைகளிலே ஈன்றளித் தாள்
மை நிறத்துக் கண்ணனைப் போல் எட்டாவதாய்
மாதரசி பெற்றதனால் கண்ணனானேன்
கை வீசு முன்னாலே அன்னை தமிழ்
கைப் பற்றிச் சென்றதனால் வெற்றி கொண்டேன்
மெய்த் தமிழின் வள்ளுவரில் துவங்கி எங்கள்
மேன்மை நிறை புலவர்களால் வாழுகின்றேன்

0 மறுமொழிகள்: