Wednesday, January 12, 2011

தொண்டர் தோன்றிய நாள்

துறவு என்றால் தொண்டு என்ற உண்மைதன்னை
துலங்க வைத்த பெருமனிதன் தோன்றிய நன்னாள்
உறவு என்றால் ஏழையர்கள் என்று கொண்ட
உரத்த குரல் மாமுனிவன் உதித்த நன்னாள்
கரவு இல்லா உண்மைகளை என்றும் எங்கும்
கதைப்பதிலே அச்சமில்லான் வந்த நன்னாள்
நிறைவு விவேகாநந்தர் என்ற சொல்லே
நீள் உலகம் வாழ வைக்கும் பெரும் பெயரே

0 மறுமொழிகள்: