Thursday, September 13, 2012

எல்லாம் அரசியல்

அணு மின் நிலையத்தால் ஆபத்து. உதயகுமார் தலை மறைவு. துப்பாக்கிச் சூட்டில் பலியான மீனவர் குடும்பத்தினர்க்கு வை.கோ. ஆறுதல். சரண்டைந்து விடாதீர்கள். தலைமறைவாகவே இருங்கள் கேஜ்ரிவால் வேண்டுகோள்.

விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளால்தான் இயற்கையை இழந்து நிற்கின்றோம். மழை இல்லை. பருவங்கள். பொய்க்கின்றன. நான் ஒரு கவிதையில் சொல்லியிருந்தேன்

                        ஒசோன்
                        படல
                        ஒட்டை குறித்து
                        அறிஞர்கள்
                        கூட்டம்
                        ஏ.சி. அறையில்

இதுதான் நடக்கின்றது. அரசியல் அரசியல் எல்லாவற்றிலும் அரசியல்.

சுற்றுப்புறச் சூழல் மாசு பட்டிருப்பது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற
இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களால்.உள்ளாடை தயாரிப்பில் சிறந்து விளங்கும் திருப்பூர் சாயக் கழிவுகளால் தான் அப்பகுதியில் இயற்கை அளித்துள்ள ஆறுகள் அனைத்தும் குடி நீருக்கும் பயன் படுவதில்லை. வேளாண்மைக்கும் பயன் படுவதில்லை.

எந்த ஆலையானாலும் அந்தப் பகுதி மக்களின் உடல் நலத்தைப் பாதிப்ப்து தான்.

மறந்து விடாதீர்கள். அது குறித்து எந்த வருத்தமும் வை.கோ.அவர்களுக்கும் இல்லை அண்ணன் நெடுமாற்னுக்கும் இல்லை. தோழர் நல்லகண்ணுக்கும் இல்லை.

சென்னை மாநகரப் பெருக்கத்தில் சுற்றியுள்ள பல வேளாண் கிராமங்கள் அழிக்கப் பட்டனவே அது குறிதது இவர்கள் போராட்டங்கள் நடத்தவில்லை.

விளை நிலங்களும் ஏரிகளும் குளங்களும் கால்வாய்களும் கல்வி நிலையங்கள் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப் பட்ட போது இவர்கள் போராடவில்லை.

கோகோ கோலா நிறுவனம் நம் ஆறுகளில் இருந்துதான் தண்ணீர் எடுத்து விற்கின்றன. யாரும் அதனை தடுக்கவில்லை.

எல்லாவற்றிற்கு மின்சாரம் என்று இயற்கையாக வாழ்வதிலிருந்து மக்களை
மாற்றியாகி விட்டது.

மின் தட்டுப் பாடு என்றால் உடன் கருணாநிதி ஆண்டாலும் ஜெயலலிதா ஆண்டாலும் இவர்கள் தான் கண்டன் ஆர்ப்பாட்டங்கள் நடத்துகின்றனர்.
மின்சாரத்தை மரத்திலிருந்து பறிக்க முடியாது என்று இவர்களுக்குத் தெரியும்

பழைய காலம் போல இயற்கையோடு இயைந்து வாழவது என்று முடிவெத்தால் தான் இந்த் துன்பங்களிலிருந்து மீள முடியும். எல்லா விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளையும்  தூக்கி எறிய. இந்தத் தலைவர்கள் முன் வருவார்களா.

மின் கசிவால் வேறு அரசாங்கத்தின் முக்கியமான கோப்புக்களெல்லாம் எரிந்து போய் விடுகின்றன. ஆகவே மின்சாரம் பல அரசியல் வாதிகளைக் காப்பாற்றி விடுகின்றது.

நாம் மின்சாரம் இல்லாத ஒரு வாழ்க்கைக்கு மக்களை மாற்றியே தீர வேண்டும்.

நாம் உண்ணுகின்ற உணவுப் பொருட்கள் நமக்கு நன்மை செய்பவையா. எல்லாம் மின்சாரம் வந்த பிறகு மோசம்தான்.நமது பெண்கள் அறுவை சிகிச்சை மூலம் தான் குழந்தையை எடுக்கின்றார்களே ஒழிய பெறுவதில்லை.காரணம் முடிவதில்லை. ஆட்டுரல் அம்மி எல்லாம் அவர்களுக்கு இடுப்பைப் பலப் படுத்தின .பெற்றுக் கொண்டார்கள்.இன்று.
விஞ்ஞானக் கண்டு பிடிப்புகள் அவர்களை எந்த வேலையும் செய்ய விடாமல் தவிர்த்து விடுகின்றன. பிறகு உடல் குறைக்க மருந்துகள். உடற் பயிற்சிக் கூடங்கள்.

இயற்கையாக வாழ்வோம். எல்லா விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளையும் புறக்கணிப்போம்
ஆலைகளை யெல்லாம் மூடுவோம். உடனே இந்தத் தலைவர்கள்தாம் ஆகா எத்தனை பேர் வேலை வாய்ப்புப் பறி போகின்றது கூக்கூரல் இடுவார்கள்.

ஆட்டோவில் பள்ளிக் குழந்தகளை அதிக அளவு ஏற்றிச் செல்வதில் விபத்துகள் ஏற்படும் நேரம் கொடுமையாக ஆகின்றது என்று கட்டுப் படுத்தினால் ஆட்டோ தொழிலாளி வயற்றில் அடிக்காதே என்று இவர்களே தான் கோஷம் போடுகின்றனர்.

வேளாண் தொழிலுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. பீடி சுற்றுவதில் வருமானம் அதிகம். பீடி சுற்றுகின்ற பெண்களுக்கே காச நோய் வருகின்றது. குடிப்பவனுக்கும் கேடு செய்கின்றது. வேளாண் தொழில் ஆரோக்கியம் தரும்.

எல்லா விளை நிலங்களும் பல மாடிக் கட்டிடங்களாகின்றன. இந்தத் தலைவர்கள் அதற்காகப் போராடுகின்றனரா. இல்லை

கிரானைட் கற்கள் விஷயத்தில் இத்தனை பெரிய திருட்டுத் தனங்கள் நடந்திருக்கின்றன.இந்தத் தலைவர்கள் அது குறித்துப் பேசவேயில்லையே.
ஏன்.

நான் ஒரு கவிதையில் சொல்லியிருந்தேன்

உர
விலையைக் குறை
கூலியை
உயர்த்திக்
கொடு
நெல்லின்
விலையை
உயர்த்து

அரிசி
விலையை
உயர்த்தாதே

எல்லாம் அரசியல் வேறொன்றுமில்லை.

0 மறுமொழிகள்: