Monday, September 17, 2012

பாராட்டுங்கள்

மத்திய அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே எல்லாவற்றையும் மறந்து விடுவோம் என்று சொல்கின்றார்.

என்ன திமிர்

 பாரதியின் வீட்டை சிதிலமடைய விட்டு விட்டோம்.தமிழ்த் தாத்தா உ.வே.சா. வீடு சிதிலமடைந்து வருகின்றது.
அவர்களையெல்லாம் நாம் மறந்தா விட்டோம். இல்லை.

36 குழந்தைகள் தீயிலே கும்பகோணத்திலே கருகிய போது எத்தனை பேர் எத்தனை வாக்குறுதிகள் தந்தார்கள். அங்கே போய் புகைப்படங்களிலே அழுதார்கள்.அவர்கள் எத்தனை பேர் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினார்கள். யார் கேட்டார்கள்.

நீச்சல் குளத்தில் மாணவன் இறந்து போனான் பத்மா சேஷாத்ரி பள்ளியில். அந்தப் பள்ளியின் தாளாளர் கைது செய்யப் படவில்லையே. ஏன் என்று எத்தனை பேர் கேட்டார்கள்.

பேருந்தில் ஒட்டை இருந்த பள்ளித் தாளாளர் கைது செய்யப் பட்டாற் போல
இவரும் கைது செய்யப் படவில்லையே. ஏன்.

எங்கே துப்பாக்கிச் சூடு நடந்தாலும் நீதி விசாரணை கேட்பார்கள். அதன் பின்னர் எத்தனை பேர் அது குறித்து நினைவில் வைத்திருப்பார்கள்.

மின் கட்டண உயர்வு பேருந்து கட்டண உயர்வு என்றெல்லாம் புலம்பினார்களே. இன்று என்ன நிலைமை.

மறதி மன்னர்கள் இந்தியர்கள் என்பதனை நன்கு உணர்ந்ததனால் தானே அவர் வெற்றியும் பெற்றிருக்கின்றார். அமைச்சரும் ஆகியிருக்கின்றார்.

ஒன்றும் இல்லை. நமத் தமிழ்நாட்டில் மாறி மாறி ஏற்படும் கூட்டணிகள்.அதன் தலைவர்கள் ஒவ்வொரு நேரத்தில் பேசுகின்ற பேச்சுகள் எழுதிய எழுத்துகளையெல்லாம் நினைவிலா தலைவர்கள் வைத்திருக்கின்றார்கள். நாமும்  வைத்திருக்கின்றோம்.

அது போல மறந்து விடுவது தான் நமக்கு நல்லது.

காந்தி காமராஜர் கக்கன் சாஸ்திரி நேரு வ்ல்லபாய் அபுல் கலாம் ஆசாத் கான் அப்துல் கபார்கான். இவர்களையெல்லாம் நாம் மறந்து விடுவதில்லையா.அதனால்தானே இவர்களெல்லாம் அமைச்சர்களாகி இருக்கின்றார்கள்.

ரெட்டி சகோதரர்கள் ஊழலுக்கு துணை போன எடியுரப்பாவை ஒன்றும் செய்ய முடியாத பா.ஜ.க. இதைச் சொல்வது தான் மோசடி.

இத்தனைக் கொசுவர்த்தி சுருள்கள் விற்கின்ற இந்த நாட்டில் மத்தியிலும் மாநிலத்திலும் சுகாதரத் துறை அமைச்சர்கள் இருக்கின்றார்கள்.அவர்கள்
எல்லாவற்றையும் மறந்தவர்களாக இருப்பதினால் தானே அமைச்சர்களாக
இருக்க முடிகின்றது.

நீரா ராடியாவை நினைவு இருக்கின்றதா யாருக்காவது.

விடுங்கள். ஒரு அமைச்சர் உண்மை பேசுகின்றார். அவரைப் பராட்டுவதை விட்டு விட்டு .
 




0 மறுமொழிகள்: