Saturday, September 29, 2012

இன்று இருதய தினமாம்

இன்று இருதய தினமாம்.இன்று மட்டுமாவது இருதயத்தோடு வாழ வேண்டுகின்றார்கள் போல.

இருதயம் நன்றாக இருக்க வழிமுறைகள் சொல்லுகின்றனர்.சிகரெட் பிடிக்காதே.உப்பு சீனியை(சர்க்கரையை) குறைவாக ப்யன்படுத்து. முடிந்தால் பயன் படுத்தாதே. கொழுப்பு உணவு வகைகளை விட்டு விடு. மாடிப் படிகளை ஏறிக் கட. விரைவு உணவகங்களில் சாப்பிடாதே. பல வழி காட்டுதல்கள்.

நல்லதை நினை நல்லதைச் செய் தவறான வழியில் பொருளீட்டாதே.
அடுத்தவர் வாய்ப்புகளை பறிக்காதே.பொறாமை கொள்ளாதே. வாய்ப்புகளை தவறுக்கு பயன் படுத்தாதே. ஆமாம் சட்டப் பேரவை நாடாளுமன்ற உறுப்பினரானால் மக்களுக்குச் சேவை செய். அந்தப் பதவிகளை வைத்து நீத்யற்ற மூறையில் போருளீட்டாதே.கல்வி கற்றதன் பயனாகக் கிடைத்த அரசு வேலை வாய்ப்பில் ஊதியத்திற்கு மேல் பொருளிட்டாதே. பேருந்திற்கு மட்டும் காசு வைத்துக் கொண்டு அரசு அலுவலகங்களை நம்பி வரும் ஏழைகளை அலைய விடாதே. கல்வி நிலையங்களை கொள்ளையடிப்பதற்காக நிறுவாதே. காந்தி காமராஜர் படேல் சாஸ்திரி கக்கன் லூர்தம்மாள் சைமன்  வினோபா பாவே என்ற மனிதர்களைப் போல் மனிதனாக வாழ். குறளை பேசவும் எழுதவும் மட்டும் பயன் படுத்தாதே.
உன் குடும்பம் என்பது மனித குலத்தின் உதவியின்றி வாழ முடியாது என்று உணர். அதை விட்டு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் அது அரசியல் பணியாக இருந்தாலும் அரசுப் பணியாக இருந்தாலும் கையூட்டு வாங்காதே.
இப்படியெல்லாம் இருந்தால் மட்டுமே போதும் உனது இதயம் நோயற்றது.
இவைதான் நோய்க்குக் காரணங்கள்.

வள்ளுவர் சொல்லுகின்றார். தந்நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்த பின் தன்நெஞ்சே தன்னைச் சுடும் என்கின்றார். குற்ற உணர்வு உன்னை நோய்க்
காளாக்கிக் கொன்று விடும்.

ஈன்றாள் பசி காண்பாயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை என்கின்றார்.

நேர்மையாக இருந்தாலே இதய நோய் வராது. நன்றாகச் சாப்பிடலாம்.

மன்மோகன் சிங்கிற்கும் சோனியா அம்மையாருக்கும் இதயம் இருந்திருந்தால் வாணிகம் செய்ய வந்து தான் கிழக்கிந்தியக் கம்பெனி நமது நாட்டை அடிமை செய்து விட்டது என்ற வரலாறு நினைவிற்கு வரும்.
அதற்காகத்தான் சுதேச எண்ணம் மேலோங்கச் செய்தார் காந்தி அடிகள் வெளி நாட்டுத் துணிகளை எரித்தார் வ.உ.சி.

மன்மோகன் சிங் அரசு அதிகாரியாக் இருந்தவர். நான் இது வரை கொண்டிருந்த கருத்திற்கு மாறாக சோனியா காந்தி அவர்கள் ஒரு வெளி நாட்டுக்காரர்.

பி.எல்.480 மூலம் கோதுமை தருவதாக அமெரிக்கா சொன்ன போது அதை அன்றைய மத்திய அரசு(காங்கிரஸ்) ஏற்றுக் கோண்ட போது அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராக இருந்து கொண்டே அதனை சென்னைக் கடற்கரை போதுக் கூட்டத்தில் எதிர்த்துக் குரல் கொடுத்தவர் பெருந்தலைவர் காமராஜர்.

இங்கே யாரும் வரலாறு குறித்துச் சிந்திப்பதில்லை. ந்மது தலைவர்களுக்கு இதயமே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பது மருத்துவ உலகத்திற்கே புரியாத பெருஞ்சாவாலாக உள்ளது.
என்று உணர்கின்றேன்.

1 மறுமொழிகள்:

said...

அப்பா,

நேர்மையாக இருந்தாலே இதய நோய் வராது - அனைத்து மருத்துவ மனைகளிலும் எழுதி தொங்க விட பட வேண்டும்.

எனக்கு என்னவோ மாண்புமிகு தமிழக முதல்வரும் , திரு மம்தா பானர்ஜி அவர்களும் சேர்ந்து மத்தியில் ஆட்சி அமைத்தால் இந்தியா அல்லது நாம் காப்பாற்ற படுவோம் என்று தோன்றுகிறது.

அன்புடன்
தெயவீகராஜன்