Tuesday, September 25, 2012

புரியவில்லை

பலர் என்னிடம் நட்புக் கொள்ள வேண்டும் என்று லின்க்டு இன் என்றும் பேஸ்புக் என்றும் செய்திகள் அனுப்புகின்றனர். என்னதான் பார்ப்போமே என்று அந்த வேண்டுகோளை ஏற்று உள்ளே போனால்  அதில் நான் அவர்களோடு நட்பு பூண விரும்புவதாக செய்தி வருகின்றது. நான் எல்லோரிடமும் நட்பாகத் தானே இருக்கின்றேன். அதனால் அவற்றிற்கு பதில் தருவதில்லை.


முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் நீண்ட நாட்களாக அவரைப் பார்ப்பதற்கென்றே தலைமை அலுவ்லகத்தில் காத்துக் கிடந்த பெரியவரை அழைத்து மரியாதை செய்திருக்கின்றார். தலைமைச் செயலகத்தில் யாரோ நல்லவர் இருந்திருக்கின்றார். அதனால்தான் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத அந்தப் பெரியவர் முதலமைச்சர் அவர்களைச் சந்திக்க முடிந்திருக்கின்றது.
அமைச்சர்கள் பார்வையில் அவர் பட்டிருந்தால் ஒரு நாளும் அவரைப் பார்த்திருக்கவே முடியாது.

இரண்டு முறை முதலமைச்சரை நேரில் சந்தித்து நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்த அனுபவத்தில் சொல்கின்றேன். அவர் மிக வெளிப்படையான
வர். குழந்தை போன்றவர்.

அவருக்கு அடுத்த நிலையில் இருக்கின்ற அமைச்சர் பெருமக்கள் நேர் எதிரானவர்கள். சிரித்துக் கொண்டேயிருக்கின்றாரே பன்னீர்செல்வம் அவர் எத்தனை ஆபத்தானவர் தெரியுமா

அம்மாவிற்காக நான் தமிழ்கம் முழுவதும் பேசியபோது அவர் தொகுதிக்கும் போனேன். அவர் என்னிடம் எப்படி நடந்து கொண்டார் என்பதனை என்னால் இன்றும் மறக்க  முடியாது.

முதலமைச்சரைச் சுற்றியிருக்கும் அமைச்சர்களிலே பலர் உண்மைத் தொண்டர்களை அவரைச் சந்திக்க முடியாமல் எப்படித் தடுக்கின்றார்கள் தெரியுமா. அதிலேயும் தோட்டத்தில் இருக்கின்ற நண்பர் பூங்குன்றன் நாம் நல்ல நோக்கில் எழுதுகின்ற கடிதங்கள் எதையும் அவரிடம் தருவதில்லை.

கிரானைட் பழனிச்சாமிக்கு ரொம்ப பின்பலமாக இருந்தவர் ஒரு திரைப் படப்
பாடலாசிரியர் அவரைக் காப்பாற்றுவது பன்னீரோ என்று சந்தேகப் படுகின்றனர் அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள்.

அந்தத் திரைபடப் பாடலாசிரியரிடம் திமுக தலைவர் தினசரி காலையில் பேசு
வார் என்பார்கள். அவர் திடீரென்று ஜெயா டிவி. விழாவில் கலந்து கொள்ளுகின்றார்.


2 மறுமொழிகள்:

said...

Appa,

Neengal "Puriyavillai" endru thalipu vaithullerr.

Aanal, engaluku "Nandrage Purikindrathu".

Anbudan
Deiveegarajan

said...

சீட்டு படுத்தும் பாடு