Saturday, September 15, 2012

விருதுகளும் பரிசுகளும்

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சிறப்பாகவே நடத்தப் படுகிறது. ஒழுங்காக முறையாக நடத்தப் படுகின்றதா என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.

போன முறையே எல்லோரும் எதிர்பார்த்த சத்ய பிரகாஷை விட்டு விட்டு யாருமே எதிர் பார்க்காத சாய் சரணைத் தேர்ந்தெடுத்தனர்.

இப்போதும் அதே போக்கில்தான் போகிறது அந்த நிகழ்ச்சி.

கவுதம் என்று ஒரு 13 வயது சிறுவன் .கர்ணன் படத்தின் உச்சக் காட்சியின் பாடலை உள்ளத்தில் நல்ல உள்ளம்  என்ற பாடலைப் பாடுகின்றான்.

உலகம் போற்றி நிற்கின்ற அருணா சாயிராம்  சுதா ரகுநாதன் பாம்பே சகோதரிகள் உண்ணி கிருஷ்ணன் பாரதியாரின் கொள்ளுப் பேரன் அனைவரும் கண்களில் நீர் மல்க அவனைப் பாராட்டினார்கள். வீணை அரக்கன் ராஜேஷ் வைத்யா அவனைத் தூக்கிக் கொஞ்சினார். கடம் மேதை விநாயகராம் மகன்  அவனைக் கட்டித் தழுவினார். வயலின் வித்வான். எத்தனையோ கச்சேரிகளுக்கு வாசித்திருக்கின்றேன். என்னை இவன் அழ வைத்து விட்டான் என்றார். டிரம்ஸ் வாசித்தவர். ஒத்திகையிலேயே இவன்  எங்களை அழ வைத்து விடுவான் என்று முடிவெடுத்து விட்டோம் என்றார்.
சுதா ரகுநாதன் அவன் க்ண்ணீரைத் துடைத்து விட்டார். உண்ணி அவனைக் கட்டித் தழுவிக்கொண்டார்.

பாம்பே சகோதரிகள் சொன்னார்கள். கவுதம் உன்னை என்ன சொல்ல. எங்களுக்கு அழுகைதான் வரது என்றார்கள். சுதா பாராட்ட முடியாமல் அவனைப் பார்த்து நீ சொத்து என்றார். வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு இதயமும் இதயமும் சந்திப்பது தான் சங்கீதம் க்வுதம் நீ இந்த 13 வயசிலே அந்த உணர்வை உன் பாடலிலே கொண்டு வந்தாய். நீ இதற்கும் மேலே என்று இறைவனின் சிறந்த படைப்பு அந்தச் சிறுவன் என்பதைச் சொன்னார். உண்ணியும் அதே கருத்தைச் சொன்னார். அவர்களாகவே எழுந்து வந்து அந்தச் சிறுவனைப் பாராட்டி மகிழ்ந்தனர்.

அதே கவுதம். பின்னர் பாடும்போது மால்குடி சுபா அவனைப் பர்த்து நீ நாட்டுப் புறப் பாடல்கள் பாடுறவன். ஆனாலும் இந்தப் பாட்டைப் பரவாயில்லை பாடிட்டே என்கின்றார். இவர் ஒன்றும் சங்கீதத்தில் சாதித்தவரில்லை. இவரும் திரைப்படங்களில் குத்துப் பாட்டுப் பாடுகின்றவர்தான்.

அவன் கிராமத்துக் காரன். அதனால் அவனுக்குச் சங்கீதம் வராது என்று கருதுகின்றார் போலும். தம்பி மனோவும் அதனை ஆதரித்துப் பேசிய போது அதிர்ந்து போனேன். அருணா அம்மையாரை விட சகோதரி சுதாவை விட பாம்பே சகோதரிகளை விட உண்ணியை விட இவர்கள் சங்கீதத்தில் பெரியவர்கள். அங்கே பிரகதி என்கின்ற அமெரிக்க் குடிமகள் நன்றாகவே பாடுகின்றார். அவர் சரியாகப் பாடாத போதும் மால்குடி அம்மா அப்படியே தேன் குடித்தால் போலப் புகழுகின்றார்.

சுகன்யா என்கின்ற பெண் மிக நன்றாகப் பாடுகின்றாள். அவளுக்கு இரண்டு முறை தங்கப் பரிசு கொடுத்தார்கள். யாழினி என்கின்ற் சின்னப் பெண் மிக நன்றாகப் பாடி முதலில் ஒரு முறை தங்கம் பரிசு பெற்றாள். இரண்டாவது ஒரு முறை நடிகர் விக்ரம் முன்னால் பாடி எல்லோருடைய பாராட்டையும் பெற்றாள். அவளுக்கு இரண்டாவது முறை தர வேண்டிய தங்கப் பரிசை பிரகதிக்குக் கொடுத்தார்கள்.

யாழினி அம்மாவைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது அவர்கள் கறுப்பர் இனம்.கவுதமும் அப்படித் தான் அதனால்தான் மால்குடி சுபா அம்மாவிற்கு அவர்களைப் பிடிக்கவில்லை.எப்படியும் பிரகதிக்கு அந்த முதல் இடத்தைத் தருவதற்கு முயற்சி நடக்கிறாற் போல் தெரிகின்றது.சுகன்யாவிற்குத் தர முடியாது.அவர் மலையாள நாட்டைச் சார்ந்தவர் போல.வைகோ அண்ணன் நெடுமாறன் போன்றவர்கள் கோபப் படக் கூடும்.

அவர்கள் பரிசு அவர்கள் தருகின்றார்கள். நாம் என்ன கேட்க முடியும்.இதில் இன்னொரு கொடுமை இந்த நிகழ்ச்சியை  இயக்குபவர்களைக் கேட்டால் சங்கீதத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இருக்காது.

என் அனுபவம் அதுவேதான்.

வழங்கப் படுகின்ற விருதுகள் போய் வாங்கப் படுகின்ற விருதுகள் ஆகி விட்ட நாட்டில் இதற்கு வருத்தப் பட்டு என்ன செய்ய.

திருநெல்வேலி மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதிற்கு மாவட்டக் கல்வி அலுவலகம் தேர்ந்து அனுப்பிய பெயர்கள் வேறு. அறிவிக்கப் பட்ட பெயர்கள் வேறு. என்ன செய்ய. எல்லாவற்றிலும்  சாதி மதம்.

1 மறுமொழிகள்:

said...

இவர்கள் இப்படித்தான் பாடுவார்கள் என்று நடுநிலையாளர்களே முடிவுக்கு வருவது தான் வருத்தப்பட வைக்கிறது... அதனால் தன்னால் மற்ற பாடல்களை பாட முடியாதோ என்கிற எண்ணமும் பாடுபவர்களுக்கு வரலாம்...

/// இந்த நிகழ்ச்சியை இயக்குபவர்களைக் கேட்டால் சங்கீதத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இருக்காது. ///

எல்லாம்... எல்லாமுமே பணம் தான்...