Sunday, November 29, 2009

தம்மைக் காக்க

அங்கவையைச் சங்கவையை திரைப் படத்தில்
அசிங்கமாய்க் காட்டி நின்றார் கோபமில்லை
ஆத்திச் சூடி அவ்வை தன்னை திரைப் படத்தில்
ஆட்டம் போட்டுக் கேலி செய்தார் வெட்கமில்லை
தங்க மகள் கண்ணகியை குத்துப் பாட்டில்
தடித்தனமாய்க் காட்டுகின்றார் பொங்கவில்லை
இங்கு உள்ளார் தமிழ்த் தலைவர் பல பேர் இன்றும்
இனமானம் பேசி நிற்பார் தம்மைக் காக்க

4 மறுமொழிகள்:

said...

மிகவும் அருமை

said...

உலகத்தோடு ஒட்ட ஒழுகத் தெரியாது.அடுத்தவன் உயர்வை கண்டு பொறாமைப்படாமல் இருக்கமுடியாது. ஒற்றுமையாய் வாழ தெரியாது
சுயநலமில்லாமல் இருக்க தெரியாது. மூட நம்பிக்கைகளை விட மனம்
கிடையாது. உள்ளும் புறமும் என்றும் ஒன்றாக இருக்காது. தன இனத்தையே
காட்டி கொடுத்து கடைசியில் தானும் சேர்ந்து அழியும் வரலாறு கொண்டவன்.எதையும் சிந்திக்காமல், ஆராய்ந்து பாராமல் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு நம்பி நாசமாய் போய்கொண்டிருப்பவன்.கடற்கரையில் இருக்கும் மணல் துகள்களை எண்ணி விடலாம். ஆனால் இவன் தன் இன மக்களின் மோசடிகளில் சிக்கி இழந்த உடைமைகள், நிதி மதிப்பு எவ்வளவு கோடி என்று கணக்கிட இயலாது. இவந்தான் இன்றைய பெரும்பாலான தமிழனின் ஒட்ட்டுமொத்த முகம்

said...

மிகச்சரியாகச்சொன்னீர்கள் அய்யா!

said...

மிகச்சரியாகச்சொன்னீர்கள் அய்யா!