Saturday, November 7, 2009

சிரிப்பாரே

வள்ளுவர் என்றொரு அறிவுக் கொழுந்தை
வடிவாய்ப் பயந்தாள் தமிழ் அன்னை
உள்ளுவதெல்லாம் உயர்வாய் எண்ண
உலகப் பொதுமறை அவர் தந்தார்
எள்ளி நகையாட ஒழுக்கம் இன்றி
எப்படி யெல்லாம் வாழ்கின்றோம்
வள்ளுவர் நமது சொந்தம் என்றால்
வாய்விட் டனைவரும் சிரிப்பாரே

1 மறுமொழிகள்:

said...

வாழும் வள்ளுவன் என்று பட்டம் சூட்டி கொள்கின்றார்
அவன் கொள்கைகளை காலில் போட்டு மிதிக்கின்றார்
சிலைகளும், கோட்டங்களும் காலத்தால் மண்ணோடு
மண்ணாகிவிடும் ஆனால் திருவள்ளுவனின்
கருத்துகளோ என்றும் நிலைத்து நிற்கும்.