Sunday, August 29, 2010

திறன் என்றே போற்றிடுவார்

ஊராரின் பிள்ளைகளை உணர்ச்சி யூட்டி
ஒரு நொடியில் தீக் குளித்து மாள வைப்பார்
சீராட்டி தம் மக்கள் நாட்டை யாள
செய்வ தெல்லாம் சரியாகச் செய்து வைப்பார்
தேரோட்டி மகன் கொன்ற மனுவைப் பற்றி
தினம் பேசி மேடைகளில் அழுதிடுவார்
பாராட்டித் தம் மகனின் தவறையெல்லாம்
பழந்தமிழர் திறன் என்றே போற்றிடுவார்

1 மறுமொழிகள்:

said...

சூப்பர் கண்ணன் சார்.