Saturday, October 2, 2010

அண்ணலே

அண்ணலே
உன் பிறந்த நாள்

சமாதியில்
பஜனை உண்டு

சிலைகளுக்கு
மாலை
அணிவிப்பவர்
சிலர்
நீ
உயிரோடிருந்தால்
உன்
அருகில் வரவே
அஞ்சியிருப்பார்கள்

உன்னை
மறந்து விட்டோம்
என்கின்றனர்

அதனால்தான்
அமைச்சர்களாய்
இருக்க முடிகின்றது

ஆட்சி
செய்ய
முடிகின்றது

உன்னை
மறைத்து
விட்டோம்
என்கின்றனர்

என்ன செய்ய
எங்களுக்கும்
மனச் சாட்சி
வந்து
விட்டால்

சாஸ்திரியும்
இதே
நாளில்
பிறந்த
கொடுமையை
என் சொல்ல

அதனால் தான்
மனம்
வெதும்பிய

கறுப்புக்
காந்தி
இன்று
மறைந்தார்

0 மறுமொழிகள்: