Tuesday, October 26, 2010

மரபுக் கவிஞர்

பணத்திற்காய் யாரிடத்தும் பல்லிளித்து
பணிவது போல் நடித்து அவர் பக்கம் நின்று
குணமுடையார் யாரையுமே அருகில் சேர்க்க
கூச்சமுற்று கொள்ளையராம் துறவியர்க்காய்
நிணம் தசை நார் எதிலுமே நாணம் இன்றி
நெஞ்சழிந்து நிற்கின்றார் மரபில் வந்தோர்
பிணம் அவர் தான் என்ன செய்ய பணக்காரரின்
பின் நின்று ஏமாற்றும் கவிஞர் இவர்

0 மறுமொழிகள்: