Tuesday, October 12, 2010

இளையராஜா இசையே வெல்லும்

இளையராஜா தனைக் குறையாய்ப் பேசுவோர்கள்
ஏவலர்கள் மேட்டுக் குடிக் கூட்டத்திற்கு
உழைகிறது அவர் மனது ஏழையவர்
உயர்ந்த இசை கொல்கிறது அவர்களையே
பிழை எழுதிப் பார்க்கின்றார் சில பேர் இங்கே
பேர் பெற்ற அவராலே பேர் பெறவே
களை அவரைப் பிடுங்குதலே நமது வேலை
ககனமெல்லாம் இளையராஜா இசையே வெல்லும்

0 மறுமொழிகள்: