Saturday, October 9, 2010

உணர்கின்றோம் நாம்

துறவியென்ற பெயரில் இங்கு நடித்து வாழும்
தூய்மையற்ற திருடருக்குத் துணையாய் நின்று
வரவினையே பெருக்கி உள்ளம் ஒழித்து வாழும்
வடிவத்தார் பணம் படைத்தோர் வீட்டில் எல்லாம்
கரவு மனத்தோடு ஏவல் செய்து வாழும்
கண்ணியமே அற்றாரைக் காணும் போது
இரந்து வாழும் வறியவரை விடவும்
இவர் எத்தனையோ கீழ் என்றே உணர்கின்றோம் நாம்

0 மறுமொழிகள்: