Friday, October 8, 2010

புரியவில்லை

வெள்ளையரின் அடிமைகளாய் இருந்தோம் என்று
வெளிச்சமிட்டுக் காட்டுதற்காய் ஒரு அமைப்பு
துள்ளி விளையாடுகின்றார் டில்லி மண்ணில்
துவக்கி வைக்க இளவரசர் வந்து சென்றார்
எண்ணுகின்றேன் எண்ணுகின்றேன் இவ்வமைப்பு
ஏதுக்காய் இருக்கின்றது கேவலமாய்
மண்ணுலகில் அடிமைகளாய் இருந்ததனை
மறக்காமல் இருப்பதற்கா புரியவில்லை

0 மறுமொழிகள்: