Tuesday, October 12, 2010

நம்மோர் சில்லோர்

பொய்த் துறவிக் கூட்டத்தார் பெருகி விட்டார்
பொன்னழகுத் தமிழ்நாட்டில் என்ன செய்ய
மெய்த் தவத்தார் நாடு நந்தம் நாடு என்று
மேல் நாட்டார் வணங்குகின்றார் அவர் பணத்தை
கைத்தலத்தில் பற்றி நன்கு வாழுகின்றார்
கழிசடையாம் இத் துறவிக் கூட்டத்தாரும்
அத்துறவிக் கூட்டத்தின் அடிமைகளாய்
ஆகி பணம் சேர்க்கின்றார் நம்மோர் சில்லோர்

0 மறுமொழிகள்: