Friday, October 8, 2010

வாழுகின்றார்

சாமியார்கள் தனை வைத்துப் பிழைப்பவர்கள்
சரியாகப் பணம் சேர்த்து வாழ்கின்றனர்
யாரிடத்தும் கைகள் கட்டி வாழ்கின்றனர்
எவரிடத்துப் பணம் எனினும் வணங்குபவர்
தாமறிந்த தமிழ்த் தரத்தை இழந்து நிற்பார்
தன் குலத்துப் பெருமைகளும் துறந்து நிற்பார்
யாமறிவோம் பணம் இவரைப் படுத்துவதை
என்ன செய்ய இவரும் தான் வாழுகின்றார்

0 மறுமொழிகள்: