Saturday, January 1, 2011

சுதா ரகுநாதன் அருணா சாய்ராம் அம்மா

பைந்தமிழில் மிகச் சிறப்பாய் பாரதியை
பக்தித் திருவாசகத்தைப் பாடுகின்றார்
ஐம்பொறியும் ஒன்று பட சுதா ரகுவும்
அருணா எம் அம்மாவும் பாடுகின்றார்
வந்தனங்கள் செய்வதற்கு முயலும் நேரம்
வாய் நிறைய ஆங்கிலமே பேசுகின்றார்
நொந்து போனேன் என்ன செய்ய தமிழறிந்தோர்
நோக வைக்கும் இத் தொழிலைச் செய்யலாமா

1 மறுமொழிகள்:

said...

வருத்தம் தான் ஐயா. ஆங்கிலம் இரண்டறக்கலந்துவிட்டிருக்கிறது. ஒரு விழிப்புணர்வு இயக்கத்தின் மூலமே சிறிது சிறிதாக மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என நினைக்கிறேன். பல பாடகர்களும் ‘ச’ வை ‘ஷ’ என உச்சரிப்பதையும் அன்போடு அவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும் என்பது என் விருப்பம்!