Saturday, January 3, 2009

வள்ளுவரும் காந்தியடிகளும்

அன்பின் வழியது உயிர் நிலை என்று
அன்றே சொன்னார் வள்ளுவரும்
அன்பே வழியாய் உலகை வென்றார்
அண்ணல் காந்தி அடிகளுமே


இன்சொல்லோடு இன்முகம் ஒன்றே
ஏற்றம் என்றார் வள்ளுவரும்
தன் வாழ்வெல்லாம் அதையே கொண்டு
தாயகம் வென்றார் காந்திமகான்


வாய்மை ஒன்றே உலகம் வெல்லும்
வழியென்ற் றுரைத்தார் வள்ளுவரும்
தாய் போல் அதனைத் தலை மேல் ஏற்று
தவமாய்க் கொண்டார் காந்தி மகான்


கள்ளையுண்ணும் கொடுமை கண்டு
கடிந்தே நின்றார் வள்ளுவரும்
கள்ளை எதிர்த்துப் போரே செய்து
கண்ணியம் காத்தார் காந்தி மகான்

0 மறுமொழிகள்: