Wednesday, January 21, 2009

அழிவார் பாரும்

நல்ல வேளை தந்தையவர் குறளைத் தந்தார்
நலமாக வாழுகின்றேன் அச்சமின்றி
பல் விதத்தில் இடையூறு ஆசைத் தொல்லை
பணம் மட்டும் வாழ்க்கையென்னும் உறவுக் கூட்டம்
சொல்லுகின்ற சொற்களிலே நேர்மையில்லை
சூதான தலைவரிடம் உண்மையில்லை
அள்ளுகின்றார் கோடிகளை ஏழை தம்மின்
அடிமனத்துக் கோபங்கள் கண்டாரில்லை


வள்ளுவரை மேடை தோறும் பேசுகின்றார்
வாய் திறந்தால் அவர் குறளே கூறுகின்றார்
அள்ளி அள்ளிச் சேர்க்கின்றார் கோடிகளை
அழுது நிற்கும் ஏழைகளைக் கருத மாட்டார்
சொல்லி நின்றார் வள்ளுவரும் அவர் தம் கண்ணீர்
சோதியெனக் கோடிகளை அழிக்கும் என்று
உள்ளுவரோ தவறானார் மாட்டார் மாட்டார்
ஒழிந்தழிவார் ஒழிந்தழிவார் அழிவார் பாரும்

0 மறுமொழிகள்: