Monday, January 26, 2009

சொல்வாரில்லை

மனிதர்களாய் வாழ்ந்திடவே மறந்தே போனார்
இவர்
மறந்தே போனார்
மற்றவரை ஏய்ப்பதிலே சிறந்தே போனார்
இவர்
சிறந்தே போனார்
கனிவாகப் பேசுவதில் பெரிதே ஆனார்
இவர்
பெரிதே ஆனார்
களவு செய்து வாழ்வதிலே தலைவர் ஆனார்
இவர்
தலைவர் ஆனார்
வனிதையரைக் கண்டு விட்டால் சிறியர் ஆனார்
இவர்
சிறியர் ஆனார்
வாழ்ந்திருக்கும் போதே இவர் இறந்தும் போனார்
ஆம் ஆம்
இறந்தே போனார்


தொடர்ந்து கெட்ட தவறுகளைச் செய்தே நின்றார்
இவர்
செய்தே நின்றார்
தொய்வு இன்றி ஊழல்களை காத்தே நின்றார்
இவர்
காத்தே நின்றார்
உணர்ந்து திருந்த என்றும் எங்கும் முயன்றாரில்லை
இவர்
முயன்றா ரில்லை
உண்மை தன்னை என்றும் எங்கும் தெரிந்தாரில்லை
இவர்
தெரிந்தாரில்லை
தினந் தினமும் தவறுகளே தீயார் எல்லை
இந்தத்
தீயார் எல்லை
தேசமெங்கும் தெரிந்திருந்தும் சொல்வாரில்லை
இங்கு
சொல்வாரில்லை

0 மறுமொழிகள்: