Monday, May 10, 2010

தேம்புகின்றாள் பொருநை அன்னை

பொருநை நதி கூவம் என மாறிப் போகும்
பொறுப்பற்ற சிலர் செயலால் என்ன செய்ய
கருணை இல்லார் அரசியலார் இன்றவர்க்கு
கை நிறையப் பணம் வேண்டும் எதிர்காலத்தில்
அருந்துதற்கு நீரின்றி அவர் குடும்பத்(து)
தடுத்த தலைமுறையும் தான் அவதியுறும்
திருந்தவில்லை தினம் தினமும் மணல் திருட்டு
தேம்புகின்றாள் பொருநை அன்னை ஒழிக இவர்

0 மறுமொழிகள்: