Saturday, May 29, 2010

உயர் குடியின் பள்ளிகளை

மாநகராட்சிப் பள்ளி தனில் படித்த
மாணவியாம் ஜாஸ்மின் தான் முதலிடத்தில்
ஆன மட்டும் பணக்காரப் பள்ளிகளில்
அவதியுற்று குழந்தைகளைச் சேர்க்கும் பெற்றோர்
தானுணர வேண்டும் இதை தங்கள் பிள்ளை
தடுமாற இடமின்றிப் படிக்கும் நன்கு
ஊனுறக்கம் இல்லாமல் துன்பம் தரும்
உயர் குடியின் பள்ளிகளை ஒதுக்க வேண்டும்

1 மறுமொழிகள்:

said...

சரியான நேரத்தில்..சரியான அறிவுரை அய்யா!