Tuesday, May 25, 2010

ஒதுங்கிச் செல்லும்

எல்லாமே நான் தான் எங்கேயும் நான் தான்
எவர் உண்டு எனக்கிணை தமிழே நான் தான்
சொல்லாதார் தமிழுக்குத் துரோகியாவார்
சூது வாது நிறைந்த அவர் பேடியாவார்
கல்லாதார் அவரை நான் ஏற்க மாட்டேன்
கனித் தமிழ் என் குடும்பத்தின் சொத்து கண்டீர்
நல்லோராய் வந்து எமைப் புகழ்ந்து செல்லும்
நாடாத நாய்க ளெல்லாம் ஒதுங்கிச் செல்லும்

0 மறுமொழிகள்: